நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமூக வலைத்தளங்களில் டுவிட்டரில்தான் சினிமா ரசிகர்களின் சண்டைகள் அதிகம் நடக்கிறது. அவை தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் கடந்த சில வருடங்களாக அத்துமீறி நடந்து வருகிறது. அதைப் பற்றி டுவிட்டர் நிறுவனம் கண்டு கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட நடிகர்களும் கவலைப்படுவதில்லை.
ஆனால், பொதுவெளியில் அவர்கள் டிரெண்டிங்கிற்காகப் பயன்படுத்தும் வார்த்தைகளால் டுவிட்டர் பக்கம் போகவே யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. நேற்று மாலை முதல் திடீரென ரஜினிகாந்தைத் தரக்குறைவாக விமர்சித்து ''செத்த பாம்பு ரஜினி'' என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு டிரெண்டிங் ஆரம்பமானது. அதை விஜய் ரசிகர்கள் ஆரம்பித்து வைத்தனர். அது இன்று காலை வரை போய்க் கொண்டிருக்கிறது.
பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் விஜய்யை விமர்சித்து, “செத்த அணில் குஞ்சு விஜய்” என டிரெண்டிங் செய்து வருகிறார்கள். அதோடு ரஜினி மீதான நெகட்டிவ்வான டிரெண்டிங்கிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “கோலிவுட் பிரைடு ரஜினி” என்றும் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
யார் அடுத்த சூப்பர் ஸ்டார் ? என்ற சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. அதனால், விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் இப்படி அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.