நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் சதீஷ். சதீஷின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து பலரும் அவரது ரசிகர்களாக மாறிவிட்டனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை கடந்துவிட்ட பாக்கியலெட்சுமி தொடர் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நடிகர் ரஞ்சித்தும் பழனிச்சாமி என்கிற கேரக்டரில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். கோபி, ராதிகாவுடன் செட்டிலாகிவிட்ட நிலையில், பாக்கியலெட்சுமிக்கு ஜோடியாக பழனிச்சாமியாக ரஞ்சித் வந்துள்ளாரா? அப்படியெனில் இனி சீரியலில் சதீஷின் கதி என்ன? என்று ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில், அண்மையில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள சதீஷ், 'ஹீரோ ரஞ்சித் சார் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். புது ஹீரோ ரஞ்சித்துக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். இனி கோபியின் கேரக்டர் மிகவும் குறைவாகவே இருக்கும். மூன்று வருடம் ஆகிவிட்டது. 800 எபிசோடுகள் வந்துவிட்டது. இனி நான் கொஞ்சம் ஓய்வெடுக்க போகிறேன்' என்று அதில் கூறியுள்ளார்.
கோபியின் கேரக்டர் பாக்கியலெட்சுமி தொடரின் வெற்றிக்கு பல வகையிலும் பாசிட்டாவாக இருந்தது. தற்போது கோபி கேரக்டர் குறைக்கப்படும் என்ற தகவல் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது.