Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபாஸின் புஜ்ஜியை வடிவமைத்ததில் ஆனந்த் மஹிந்த்ரா பெருமிதம் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் ராம் ரிலீஸ் ; தயாரிப்பாளர் உறுதி | படப்பிடிப்பில் பிரித்விராஜிடம் இருமுகம் காட்டும் மோகன்லால் | விவாகரத்து செய்தி - நமீதா கொடுத்த விளக்கம்! | ஓடிடியால் தியேட்டருக்கு செல்லும் மனநிலை குறைந்து வருகிறது! -ஹிப் ஹாப் ஆதி பேச்சு | மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை | 3வது திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா வாசுதேவன்! | மோகனின் ஹரா படத்தின் டிரைலர் வெளியானது! | 2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4' | தமிழில் பிஸியாக இருக்கும் கிரித்தி ஷெட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாக்கியலெட்சுமி சீரியலுக்கு இனி இவர் தான் ஹீரோ!

05 மார், 2023 - 11:14 IST
எழுத்தின் அளவு:
Baakiyalakshmi-serial's-new-hero

விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் சதீஷ். சதீஷின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து பலரும் அவரது ரசிகர்களாக மாறிவிட்டனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை கடந்துவிட்ட பாக்கியலெட்சுமி தொடர் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நடிகர் ரஞ்சித்தும் பழனிச்சாமி என்கிற கேரக்டரில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். கோபி, ராதிகாவுடன் செட்டிலாகிவிட்ட நிலையில், பாக்கியலெட்சுமிக்கு ஜோடியாக பழனிச்சாமியாக ரஞ்சித் வந்துள்ளாரா? அப்படியெனில் இனி சீரியலில் சதீஷின் கதி என்ன? என்று ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில், அண்மையில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள சதீஷ், 'ஹீரோ ரஞ்சித் சார் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். புது ஹீரோ ரஞ்சித்துக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். இனி கோபியின் கேரக்டர் மிகவும் குறைவாகவே இருக்கும். மூன்று வருடம் ஆகிவிட்டது. 800 எபிசோடுகள் வந்துவிட்டது. இனி நான் கொஞ்சம் ஓய்வெடுக்க போகிறேன்' என்று அதில் கூறியுள்ளார்.
கோபியின் கேரக்டர் பாக்கியலெட்சுமி தொடரின் வெற்றிக்கு பல வகையிலும் பாசிட்டாவாக இருந்தது. தற்போது கோபி கேரக்டர் குறைக்கப்படும் என்ற தகவல் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலிக்க நேரமில்லை, ஜென்டில்மேன், சீதா ராமம் - ஞாயிறு திரைப்படங்கள்காதலிக்க நேரமில்லை, ஜென்டில்மேன், ... சினிமாவை விட சீரியல் தான் செட்டாகும்! திருச்செல்வத்துக்கு ரசிகர்களின் அன்பு வேண்டுகோள் சினிமாவை விட சீரியல் தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)