மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
'புஷ்பா 'படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான நடிகராகிவிட்ட அல்லு அர்ஜூன், தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசீரிஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.
இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் பூஷண் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா, அல்லு அர்ஜூன் இணைந்து வெளியிட்டனர். இதுவும் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாராக இருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2025ம் ஆண்டு வெளியாகும் என்கிறார்கள். இது ஸ்டைலிசான ஹாலிவுட் ஹீரோக்கள் பாணியிலான படம் என்கிறார்கள். தற்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகிறது.