நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

1990களில் முன்னணியில் இருந்தவர் இசை அமைப்பளார் வித்யாசகர். தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தூள், கில்லி, சந்திரமுகி, பூவெல்லாம் உன்வாசம் போன்ற காலத்தால் அழியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர். சமீபகாலமாக அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. தற்போது 'உயிர் தமிழுக்கு' என்ற படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் வித்யாசாகர் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். முதல்கட்டமாக சென்னை மற்றும் கொச்சின் நகரங்களில் நடக்கிறது. இதில் அவர் இசை அமைத்த படங்களில் இருந்து பாடல்கள் இசைக்கப்படுகிறது. தனது இசை பயணத்தின் முக்கியமான நிகழ்வுகளையும் அவர் வெளிப்படுத்த இருக்கிறார். நிகழ்ச்சி நடக்கும் இடம், தேதி பின்னர் அறிவிக்கிறார்கள். இதற்கான ஒத்திகையை தற்போது தொடங்கி உள்ளார் வித்யாசாகர்.