நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இதனை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4 பாகத்தை உருவாக்க உள்ளார். கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு வெளியேறினார். தற்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அரண்மனை 4ம் பாகம் இரு கதாநாயகிகளை கொண்டுள்ள கதைக்களமாக இருப்பதால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே அரண்மனை 3 படத்தில் ராஷி கண்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.