துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இதனை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4 பாகத்தை உருவாக்க உள்ளார். கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு வெளியேறினார். தற்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அரண்மனை 4ம் பாகம் இரு கதாநாயகிகளை கொண்டுள்ள கதைக்களமாக இருப்பதால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே அரண்மனை 3 படத்தில் ராஷி கண்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.