விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' |
உலக அளவில் மதிப்பு மிக்க திரைப்பட விருதுகளாகக் கருதப்படும் விருதுகளாக அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இருக்கிறது. 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த வருட விருதில், 'சிறந்த ஒரிஜனல் பாடல்' பிரிவில் தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் தற்போது இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ளனர்.
இதனிடையே, இந்த வருடம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 'நாட்டு நாட்டு' பாடலை மேடையில் நேரடியாகப் பாட உள்ளார்கள். தெலுங்குப் பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவருமே ஆஸ்கர் மேடையில் பாடப் போகிறார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. இந்தியக் கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மதிப்பு மிக்க நிகழ்வாக இது கருதப்படுகிறது.