மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகர் சிம்புவுக்கு அவரது பெற்றோர்களான டி.ராஜேந்தர் - உஷா தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்து பல வதந்திகள் அவ்வப்போது வெளிவருவது வழக்கம். அந்த வகையில், நடிகர் சிம்புவுக்கு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பெண்ணை (தமிழ் பெண்ணை) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், தற்போது சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிம்பு தரப்பிலிருந்து தற்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மேனேஜர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‛இலங்கை தமிழ் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது தகவலை உறுதி செய்து அதன்பின் வெளியிட வேண்டிக் கொள்கிறோம். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் உறுதியானால் முதலில் நாங்கள் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வோம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.