நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமா வசூலைக் குவித்தது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்குக் குறிப்பிடும்படியான வசூல் கிடைத்தது.
ஆஸ்கர் விருதுக்காக சிறந்த பாடல் பிரிவில் இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வாகியுள்ளது. அதற்கு விருது கிடைக்குமா என்பது இன்னும் இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.
இதனிடையே, அமெரிக்காவில் உள்ள “ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அவார்ட்ஸ்” வழங்கும் திரைப்பட விருதுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த ஸ்டன்ட்ஸ், சிறந்த ஒரிஜனல் பாடல் ஆகிய நான்கு விருதுகளை அள்ளியுள்ளது. அந்த விருதுகளை ராம்சரண், ராஜமவுலி, கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் ‛ஆர்ஆர்ஆர்' குழுவினர் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.