நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகரான அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் டைட்டில் பட்டத்தை வென்று ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறார். பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது அசீம் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என புகார்கள் எழுந்தது. அசீமும் 2024-ல் அரசியல் பாதையில் பயணிப்பேன் என பிக்பாஸ் வீட்டில் பேசியிருந்தார்.
இந்நிலையில், அசீம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டிருந்தார். எனவே, அசீம் இனி அரசியலில் பயணிக்க போகிறாரா? என பலரும் கேட்க ஆரம்பித்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் அசீம் தனது இன்ஸ்டாவில், 'அரசியலும் சினிமாவும் எனது இரு கண்கள். ஆனால், இப்போதைக்கு சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.