இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்குமே மிக பெரிய ரசிக பட்டாளமும் பெரிய மார்கெட்டும் உள்ளது. ஜூனியர் என்டிஆர் கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் உலக அளவில் மிக பெரிய வசூல் சாதனை ஈட்டியது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ல் ஆண்டில் வெளிவந்த புஷ்பா முதல் பாகமும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி படமாக மாறியது. தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தை இயக்குனர் கொரட்லா சிவா இயக்குகிறார்.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30 வது படமும் , அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய இரு படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.