நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழில் காமெடியில் கலக்கி வந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் கிக் படத்தில் நடித்துள்ளார். அடுத்தப்படியாக ‛வடக்குபட்டி ராமசாமி' என்ற படத்தில் மேகா ஆகாஷ் உடன் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பழநி அருகே நடக்கிறது. படப்பிடிப்பு இடைவெளியில் பழநி முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். மலையை சுற்றி கிரிவலம் வந்த சந்தானம் பின்னர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்துவிட்டு திரும்பிய சந்தானத்துடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம், செல்பி எடுத்தனர். பின்னர் ரோப்கார் மூலம் மலை இறங்கியவர் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார்.
கடந்த மாதம் பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். பிரபு, அமலாபால், சமந்தா, கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முருகனை தரிசித்து சென்றனர். இப்போது சந்தானம் வழிபாடு நடத்தி உள்ளார்.