ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கேப்டன் டிவியின் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இளைஞர்கள் வட்டாரத்திலும் பிரபலமானவர் திவ்யா கிருஷ்ணன். குழந்தை நட்சத்திரமாக 'கிருஷ்ணதாசி' சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான திவ்யா, தற்போது மீண்டும் நடிகையாக என்ட்ரி கொடுத்து சீரியல் சினிமா என நடித்து வருகிறார். சோஷியல் மீடியாக்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொண்டு 'தினமும் ஒரு திருக்குறள்', நகைச்சுவையான ரீல்ஸ் கான்செப்ட் என புதுப்புது ஐடியாக்களின் மூலம் டிரெண்டிங் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். திவ்யாவை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திவ்யா தற்போது சிவராத்திரியை முன்னிட்டு பெண் அகோரி கெட்டப்பில் கஞ்சா பிடிப்பது போல் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், 'தினமும் ஒரு திருக்குறள்' என நல்ல செயலை செய்துவிட்டு இப்போது புகைப்பது போல் புகைப்படம் போட வேண்டுமா? என சிலர் விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.