ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின், அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'டாடா'. இப்படத்திற்கு விமர்சகர்களிடம் பாராட்டும், ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தைப் பார்த்து தனுஷ் பாராட்டியதாக படத்தின் கதாநாயகன் கவின், கதாநாயகி அபர்ணா தாஸ் இருவரும் பதிவிட்டுள்ளார்கள். அது குறித்து கவின், “ஹாய் கவின், நா தனுஷ் பேசறேன்…… நான் கேட்பது உண்மைதானா என என்னுடைய மூளைக்குப் புரிய சில வினாடிகள் ஆனது. அதிலிருந்து நான் இன்னும் உண்மையில் வெளிவரவில்லை, இங்கு இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன்.
'டாடா' படத்தைப் பார்த்த பிறகு தனுஷ் சாரிடமிருந்து ஒரு அழைப்பைப் பெற்றது உண்மையிலேயே மகிழ்வான ஒரு தருணம். உங்களது அனைத்துப் படங்களையும் பார்த்து, உங்களது அற்புதமான திறமையைப் பார்த்து வியப்படைந்து திகைத்துப் போயிருக்கிறேன். இன்று உங்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்ததை வெறும் நன்றியுடன் சுருக்கமாக முடித்துவிட முடியாது. வளரும் நடிகர்களைப் பாராட்டுவதன் மூலம் உங்கள் மீது பெரும் மரியாதை இருக்கிறது. உங்களது 'வாத்தி' படத்திற்கு எனது வாழ்த்துகள், உங்களிடமிருந்து எப்போதும் சிறந்த படங்களை எதிர்பார்க்கிறேன், சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களைப் போன்ற வளரும் கலைஞர்களைப் பாராட்டும் உங்கள் மனதிற்கு மிக்க நன்றி,” என அபர்ணா தாஸும் குறிப்பிட்டுள்ளார்.