மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவிய காலகட்டங்களில் தன்னால் முடிந்த அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு விதமாக உதவிகள் செய்தார். இது அவரை நிஜத்தில் ரியல் ஹீரோவாக மக்கள் பாராட்டும் அளவிற்கு, அவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்று வைத்தது.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல கிளைகளைக் கொண்ட மிகப்பெரிய ரெஸ்டாரன்ட் ஒன்று தாங்கள் விசேஷமாக தயாரிக்கும் உணவை பரிமாறும் தட்டுக்கு சோனு சூட் பெயரை சூட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தி உள்ளது.
'மந்தி தளி' எனப்படும் ஒரே நேரத்தில் 20 பேர் சாப்பிடக்கூடிய அசைவ உணவை தயாரித்து அதனை ஒரு பிரம்மாண்ட தட்டில் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் வருபவர்களும் நண்பர்கள் குழுவாக வருபவர்களும் இந்த மந்தி தளி உணவை அதிகம் விரும்பி தேர்வு செய்கின்றனர். இதற்குத்தான் சோனு சூட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படி தன் பெயரில் ஒரு உணவு பரிமாறும் தட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கேள்விப்பட்டு அந்த ரெஸ்டாரன்ட் கிளை ஒன்றுக்கு நேரில் சென்று பார்த்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் சோனு சூட்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ மிகச்சிறிய அளவில் அதுவும் சைவ உணவு சாப்பிடும் என் பெயரில் 20 பேர் வரை சாப்பிடும் வகையிலான உணவை பரிமாறும் இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு என் பெயர் சூட்டியுள்ளனர்.. அன்பும் பணிவும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.