ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அதிகம் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியன் தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை இழந்தார். அப்படியாக அவர் தவறவிட்ட வாய்ப்புகளில் ஒன்று தான் ஜெய்பீம் படத்தின் செங்கேணி கதாபாத்திரம். எனவே, தற்போது சீரியலைவிட்டு விலகி சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் இடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த ரோஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு 'நீ மட்டும்' என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். கிருத்திகா நெல்சன் தயாரித்து, பாடி, இயக்கியுள்ள இந்த மெலோடி பாடலில் ரோஷினி கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார். ரோஷினிக்கு ஜோடியாக அர்ஜுன் சிதம்பரம் நடித்துள்ளார். டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த பாடலானது 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு ரோஷினியின் சினிமா கனவும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.