நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அதிகம் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியன் தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை இழந்தார். அப்படியாக அவர் தவறவிட்ட வாய்ப்புகளில் ஒன்று தான் ஜெய்பீம் படத்தின் செங்கேணி கதாபாத்திரம். எனவே, தற்போது சீரியலைவிட்டு விலகி சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் இடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த ரோஷினி நீண்ட நாட்களுக்கு பிறகு 'நீ மட்டும்' என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். கிருத்திகா நெல்சன் தயாரித்து, பாடி, இயக்கியுள்ள இந்த மெலோடி பாடலில் ரோஷினி கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார். ரோஷினிக்கு ஜோடியாக அர்ஜுன் சிதம்பரம் நடித்துள்ளார். டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த பாடலானது 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு ரோஷினியின் சினிமா கனவும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.