இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தந்தை - மகள் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் கண்ணான கண்ணே. பப்லு என்ற பிருத்விராஜ், நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி, அக்ஷிதா போபைய்யா, மானஸ் சவாளி, ப்ரியா பிரின்ஸ் என பல முன்ன்ணி நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சில தினங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கண்ணான கண்ணே தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சில புகைப்படங்களை அந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். வருகிற மார்ச் முதல் வாரத்தில் கண்ணான கண்ணே தொடரின் கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 700 எபிசோடுகளை மட்டுமே கடந்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் விரைவிலேயே முடிவுக்கு வருவதால் ரசிகர்களில் சிலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.