ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தந்தை - மகள் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் கண்ணான கண்ணே. பப்லு என்ற பிருத்விராஜ், நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி, அக்ஷிதா போபைய்யா, மானஸ் சவாளி, ப்ரியா பிரின்ஸ் என பல முன்ன்ணி நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சில தினங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கண்ணான கண்ணே தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சில புகைப்படங்களை அந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். வருகிற மார்ச் முதல் வாரத்தில் கண்ணான கண்ணே தொடரின் கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 700 எபிசோடுகளை மட்டுமே கடந்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் விரைவிலேயே முடிவுக்கு வருவதால் ரசிகர்களில் சிலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.