இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல ஆண்டுகள் தனக்கென தனி இடத்தைப் பிடித்து திரையுலகத்தில் மகாராணியாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் ஹோட்டல் அறையில் இருந்த பாத்ரூமில் இறந்து கிடந்தார். 54 வயதில் அவரது அகால மரணம் இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார். இன்னும் அவருக்குரிய இடம் கிடைக்கவில்லை. இன்னும் சில நாட்களில் அவரது அம்மாவின் நினைவு தினம் வருகிறது. ஆனால், இன்றே அவரது அம்மா பற்றிய நினைவுப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“எல்லா இடங்களிலும் உன்னை நான் இன்னும் தேடுகிறேன் அம்மா. உன்னைப் பெருமைப்படுத்தும் விதமாக எல்லாவற்றையும் நான் இன்னும் செய்கிறேன் என நம்புகிறேன். நான் எங்கு சென்றாலும், என்னென்ன செய்தாலும் அது உன்னில் ஆரம்பித்து உன்னில்தான் முடிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.