நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாத்தி'. தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படம் அங்கு 'சார்' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் மூன்றே நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நேற்று இரவே படத்தின் வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள், இயக்குனர் வெங்கி அட்லூரி, படத்தில் நடித்த சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், சுமந்த், தணிகல பரணி, ஹைப்பர் ஆதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். படத்தின் கதாநாயகன் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். தமிழ், ஹிந்தியை அடுத்து தெலுங்கிலும் தடம் பதித்துள்ளார். இனி, அவருடைய படங்களுக்கு தெலுங்கிலும் தனி மார்க்கெட் உருவாகும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.