முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் 'ரோபோ' சங்கர். இவரின் வீட்டில், சட்டவிரோதமாக கிளிகள் வளர்க்கப்பட்டதாக கூறி அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக கிளிகள் வளர்த்ததாக கூறி ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வருத்தம் தெரிவித்தால் வழக்கு இல்லை என்றும் வெறும் அபராதம் மட்டுமே விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛எங்கள் திருமணநாளுக்கு நண்பர்கள் பரிசாக அந்த கிளிகளை தந்தனர். நாங்கள் பச்சைக்கிளி என்றே நினைத்து வளர்த்தோம். பிராணிகள் மீது எங்களுக்கு பிரியம் அதிகம். நாய்க்குட்டி, மீன் வளர்ப்பது போன்று தான் இந்த கிளிகளையும் வளர்த்தோம். சில தினங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு தெரிந்தது அது விலை உயர்ந்த அலெக்ஸாண்டர் ரக கிளி என்று. நாங்கள் இலங்கைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக 14ம் தேதி சென்றோம். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த வனத்துறையினர் உறவினர்களிடம் செய்தியை தெரிவித்து விட்டு கிளிகளை எடுத்து சென்றனர். எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் சில விசயங்களை தெரிந்து கொண்டோம்'' என்றார்.