விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' |
1989ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் தெலுங்கு படம் கீதாஞ்சலி. இந்த படம் இதயத்தை திருடாதே என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் லண்டனை சேர்ந்த கிரிஜா நாயகியாக நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றதோடு விருதுகளையும் குவித்தது.
படத்தின் நாயகி கிரிஜா அதன்பிறகு மோகன்லாலுடன் 'வந்தனம்' என்ற மலையாளப் படத்திலும், பாலிவுட்டில் துஜே மேரி கசம் படத்திலும் நடித்தார். அவர் நடித்த சில படங்கள் வெளிவரவில்லை. சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். போதிய வாய்ப்பு கிடைக்காதலால் லண்டனுக்கே திரும்பி விட்டார்.
லண்டனில் பிறந்து வளர்ந்தாலும் கிரிஜாவின் பூர்வீகம் கர்நாடக மாநிலம். 53 வயதான கிரிஜா தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். காந்தாரா பட இயக்குனர் தயாரிக்கும் 'இப்பனி தப்பித இலேயல்லி' என்ற படத்தில் நடிக்கிறார். இதனை அவரது உதவியாளர் சந்திரஜித் இயக்குகிறார்.