இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
அடுத்து வெளிவர உள்ள உதயநிதி ஸ்டாலினின் படம் 'கண்ணை நம்பாதே'. கடைசி படமாக 'மாமன்னன்' வெளியாகிறது. கண்ணை நம்பாதே படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கி உள்ளார். இதில் உதயநிதி ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சித்துகுமார் இசை அமைத்துள்ளார், ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் மாறன் கூறியதாவது: ஒரு பிரச்னையில் சிக்கும் உதயநிதி அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு இரவில் நடக்கும் கதை. அந்த ஒரு இரவுக்கு முன்னும், பின்னுமான சம்பவங்கள் திரைக்கதையில் சொல்லப்படுகிறது. இதில் உதயநிதி கிராபிக்ஸ் டிசைனராக நடித்திருக்கிறார். அவரது காதலியாக ஆத்மிகா நடித்துள்ளார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் போன்றே இதுவும் கிரைம் த்ரில்லர் படம். 80 சதவீத காட்சிகள் இரவில்தான் நடக்கும். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்றார்.