மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
தமிழில் ஜேம்ஸ் பாண்டு படத்தில் நடித்தவர் ரேணு தேசாய். தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரேணு பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2012ம் அண்டு பவான் கல்யாணிடமிருந்து பிரிந்து சென்ற ரேணு தேசாய் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் இதய நோயால் அவதிப்பட்டு வருவதாக உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு இதய கோளாறு ஏற்பட்டிருக்கிறது. மேலும் பல உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறேன். அவற்றுடன் நான் தொடர்ந்து போராடி வருகிறேன். எனக்கு நெருக்கமானவர்களுக்கு இது தெரியும். இதனால் நான் கலங்கவில்லை. இப்போதும் வலுவுள்ளவளாக இருக்கிறேன். இந்த பிரபஞ்சம் நமக்கென்று ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருக்கும், அதன்படிதான் எல்லாம் நடக்கும். வாழ்க்கையின் மீது நம்பிக்கை வையுங்கள். உடல் நலத்தை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை இறைவன் கவனித்துக் கொள்வான். விரைவில் நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.