மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
'துணிவு' படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்டது. இதுகுறித்த தகவல்களை விக்னேஷ் சிவனும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு பிடிக்காததால் அது நிராகரிக்கப்பட்டது. அவரும் கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில் அடுத்து இயக்குவது மகிழ்திருமேனியா, விஷ்ணுவர்த்தனா என்ற விவாதம் நடந்தது. இதில் விஷ்ணுவர்த்தன் இந்தி படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதால். மகிழ்திருமேனிதான் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து திரும்பிய அஜித், மகிழ்திருமேனியை அழைத்து கதை கேட்டுள்ளார். அந்த கதைக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட இருக்கிறது. கவுதம் வாசுதேவ மேனனிடம் உதவியாளராக இருந்து 'முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு இயக்கிய தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்கள் வெற்றி பெற்றது. கடைசியாக இயக்கிய கலக தலைவன் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்து அவர் அஜித்தை இயக்குகிறார்.