ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
அஜித்தின் 'துணிவு' படம் வெற்றி பெற்றது. அதை கொண்டாட குடும்பத்துடன் ஜார்ஜியா சென்றார் அஜித். அங்கு 10 நாட்களுக்கு மேல் குடும்பத்துடன் பொழுதை கழித்த அவர் நேற்று அதிகாலையில் சென்னை திரும்பினார்.
இன்று முதல் அவர் தனது 62வது படத்தின் பணிகளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அஜித்துக்காக விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்திடம் சொல்லி ஓகே வாங்கியிருந்த கதையை அஜித் புறக்கணித்து விட்டார். லைக்கா நிறுவனமும் அதை ஏற்று விக்னேஷ் சிவனை கழற்றி விட்டுவிட்டது. தற்போது மகிழ்திருமேனி கதைக்கு லைக்கா நிறுவனம் ஒப்புதல் அளித்து விட்டது.
சென்னை திரும்பியுள்ள அஜித்தை மகிழ்திருமேனி விரைவில் சந்தித்து கதை சொல்ல இருக்கிறார். ஏற்கனவே ஒருவரிக்கதை பிடித்து ஓகே சொல்லி உள்ளார். இருந்தாலும் முழுகதையையும் அவர் கேட்க உள்ளார். ஒருவேளை அஜித்துக்கு பிடித்து விட்டால் படத்தை பற்றிய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். மகிழ்திருமேனி கதை பிடிக்காவிட்டால் மேலும் தாமதமாகாலம் என்று தெரிகிறது.