மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய 'லவ் டுடே' படம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது. இந்த படத்தின் 100வது நாளை படப்பிடிப்பு குழுவினர் கொண்டாடினார்கள். இதில் நாயகி இவானா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: எனது முதல் படமான 'கோமாளி' வெற்றி பெற்றாலும், அதற்கான அங்கீகாரம், பாராட்டு எனக்கு கிடைக்கவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்தேன். 'லவ் டுடே' படத்தின் கதையை கேட்ட பலர் இந்த கதையில் நடிக்க வேறு சில நடிகர்களை சொன்னார்கள். நான்தான் நடிப்பேன் என்றதும் நிராகரித்தார்கள். என்னை அவர்கள் ஹீரோவாக ஏற்க மறுத்து, அவமானப்படுத்தினார்கள். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் முன் வந்தது. அதோடு அவர்கள் எனக்கு இந்தப்படத்தின் உருவாக்கத்தில் பெரும் சுதந்திரம் தந்தார்கள்.
இந்த படத்தின் இசையை பொறுத்தவரை யுவன் சாரிடம், நிறைய விஷயங்களில் கூடுதலாக, ஈடுபாட்டுடன் இயங்கினேன். யுவன் சார் மிக அற்புதமான இசயை தந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு யுவனின் இசை கச்சேரிக்கு டிக்கெட் கிடைக்காமல் சுவரின் மீது அமர்ந்து கேட்டேன். இப்போது அவர் என் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். மக்கள் கொடுத்த ஆதரவில் தான் இந்த படம் பெரிய படமாக மாறியது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கொள்கிறேன். இவ்வாறு பிரதீப் ரங்கநாதன் பேசினார்.