கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு |
காந்தாரா படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்கிற பிரிவில் 2023 ஆம் வருடத்தின் தாதா சாஹிப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா மற்றும் மத்திய தணிக்கை வாரியம் ஆகியவை இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதை பெற இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
கடந்த வருடம் கன்னடத்தில் வழக்கமான ஒரு சாதாரண படம் என்கிற அளவிலேயே வெளியான காந்தாரா திரைப்படம், கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியிலும் கூட இதே போன்ற வரவேற்பு காந்தாராவுக்கு கிடைத்தது. கடவுள் மீது மக்கள் கொண்டுள்ள பக்தி, நம்பிக்கை, அவர்கள் பின்பற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்த ரிஷப் ஷெட்டி அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். அதனாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.