அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
இந்திய திரை உலகிற்கு, அதிகமான நடிகைகளை வாரி, வழங்கியது, கேரளா தான். இந்த விஷயத்தில், கேரளா, இன்னும் தன் கலைச் சேவையை நிறுத்தவில்லை. மலையாள தேசத்திலிருந்து, தேவதைகள், தொடர்ந்து, படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் லேட்டஸ்ட் வரவு, அவந்திகா மோகன். தற்போது, சில மலையாள திரைப்படங்களில் நடித்து வரும், அவந்திகா மீது, கோலிவுட் இயக்குனர்களின் கவனம் திரும்பியதை அடுத்து, ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால், கோலிவுட் ரசிகர்களுக்கு, விரைவில் அவந்திகாவின் தரிசனம் கிடைக்கவுள்ளது.
"கேரளா, என் சொந்த மாநிலமாக இருந்தாலும், பிறந்து, வளர்ந்தது எல்லாம், துபாயில் தான். என் தாய்மொழி மலையாளம் என்பதால், மலையாள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருந்தேன். நல்ல ரோல் கிடைத்ததால், தமிழில் நடிக்க சம்மதித்தேன். தமிழில் நடிப்பது, நல்ல அனுபவத்தை தருகிறது. ரொம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்கிறார், அவந்திகா.