சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
இந்திய திரை உலகிற்கு, அதிகமான நடிகைகளை வாரி, வழங்கியது, கேரளா தான். இந்த விஷயத்தில், கேரளா, இன்னும் தன் கலைச் சேவையை நிறுத்தவில்லை. மலையாள தேசத்திலிருந்து, தேவதைகள், தொடர்ந்து, படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் லேட்டஸ்ட் வரவு, அவந்திகா மோகன். தற்போது, சில மலையாள திரைப்படங்களில் நடித்து வரும், அவந்திகா மீது, கோலிவுட் இயக்குனர்களின் கவனம் திரும்பியதை அடுத்து, ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால், கோலிவுட் ரசிகர்களுக்கு, விரைவில் அவந்திகாவின் தரிசனம் கிடைக்கவுள்ளது.
"கேரளா, என் சொந்த மாநிலமாக இருந்தாலும், பிறந்து, வளர்ந்தது எல்லாம், துபாயில் தான். என் தாய்மொழி மலையாளம் என்பதால், மலையாள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருந்தேன். நல்ல ரோல் கிடைத்ததால், தமிழில் நடிக்க சம்மதித்தேன். தமிழில் நடிப்பது, நல்ல அனுபவத்தை தருகிறது. ரொம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்கிறார், அவந்திகா.