நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இந்தியத் திரையுலகின் மதிப்பு மிக்க இசையமைப்பாளரான இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐதராபாத்தில் இந்த மாதம் 26ம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். அது தொடர்பாக நேற்று ஐதராபாத்தில் அவருடைய ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அப்போது நடைபெற்ற கேள்வி, பதில் நிகழ்ச்சியில் “இசைக்கு டெக்னாலஜி எப்படி உதவுகிறது?,” என்ற கேள்வி இளையராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா, “இசை என்பது நமது வாழ்க்கையில் இசைக் கலைஞர்களின் டெக்னிக் ஆகத்தான் வருகிறது, டெக்னாலஜி மூலமாக வரவில்லை. இசை என்ற சக்தி மூலம் எனது ரசிகர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மீண்டும் மேடைக்கு வருவது எனக்குப் பெருமையான ஒன்று. அந்த இசை இரவை மறக்க முடியாத நினைவுகளுடனும், நிகழ்ச்சியாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்க முடியவில்லை,” என்றார்.
தெலுங்கிலும் பல எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்து அங்கும் தனக்கென தனி இடத்தைத் தன் இசையால் பிடித்துள்ளவர் இளையராஜா. ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.