மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பாகம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சார்பில் கல்கியின் அறக்கட்டளைக்கு மணிரத்னம் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
இந்த நிலையில். “கல்கி : பொன்னியின் செல்வர்”என்ற தலைப்பில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மௌலி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார். கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து மணிரத்னம் கூறும்போது “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது”என்றார்.