விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
"கும்கி படத்தில் நடித்த, லட்சுமி மேனன், அந்த படத்தில் தன்னுடன் நடித்த யானையுடன், மிகவும் பாசமாகி, படப் பிடிப்பு முடிந்தபின் கூட, யானையின் பெருமையை பற்றியே கூறி வந்தார். லட்சுமி மேனன் வரிசையில், தற்போது கார்த்திகா இணைந்துள்ளார். "அன்னக் கொடியும், கொடி வீரனும் படத்தில், ஆடு மேய்க்கும் பெண்ணாக நடித்துள்ள, கார்த்திகா. ஆடு மேய்த்த அனுபவம் குறித்து, மாய்ந்து, மாய்ந்து கூறி வருகிறார். "படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும், ஆடுகளுடன் பழக்கம் இருக்கிறதா என, கேட்டனர். ஆனால், ஆடுகளை தொட்டுக் கூட, பார்த்தது இல்லை என, கூறினேன். இதற்கு பின், ஆடு மேய்க்கும் சிலரை அழைத்து, எனக்கு, பயிற்சி கொடுத்தனர். ஆடுகளை எப்படி, மந்தையாக அழைத்துச் செல்வது, விசில் அடித்து, ஆடுகளுக்கு எப்படி சைகை கொடுப்பது என, அவர்களிடம் கற்றுக் கொண்டேன். இந்த படத்தை பொறுத்தவரை, நடிப்பு பயிற்சி பெற்றதை விட, ஆடு மேய்க்கும் பயிற்சிக்காக தான், ரொம்பவும் சிரமப்பட்டேன். அந்த சிரமத்துக்கு, படம் வெளியானதும், பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார், கார்த்திகா.