ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

உலக அளவிலான சினிமா விருதுகளில் அதிக மதிப்புடையதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது.
விருதுக்கு முன்பாக ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வாகியுள்ள 'நாமினீஸ்' அனைவரும் கலந்து கொள்ளும் 'ஆஸ்கர் நாமினீஸ் லன்ச்சான்' நிகழ்ச்சி நேற்று இரவு கலிபோர்னியா, பெவர்லி ஹில்ஸ், த பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் டாம் க்ரூஸ், ஹாங் சாவ், ஆஸ்டின் பட்லர், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், மைக்கேல் வில்லியம்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அடுத்த மாதம் மார்ச் 12ம் தேதி 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய சினிமா ரசிகர்களிடம் எழுந்துள்ளது.