ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், மாதவன், சிம்ரன், கீர்த்தனா மற்றும் பலர் நடித்து 2002ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளிவந்த படம் 'கன்னத்தில் முத்தமிட்டால்'. இலங்கைத் தமிழர் போராட்டத்தின் பின்புலத்தைக் கதையாகக் கொண்டு, தத்தெடுக்கப்பட்ட ஒரு இலங்கைத் தமிழ் சிறுமியைப் பற்றிய உணர்வுபூர்வமான படமாக இப்படம் வெளிவந்தது.
மாதவன், சிம்ரன், கீர்த்தனா, நந்திதா தாஸ், பிரகாஷ்ராஜ், சக்கரவர்த்தி உள்ளிட்டவர்களின் உணர்வுபூர்வமான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. ஏஆர் ரஹ்மானின் இசையில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக அறிமுகப் பாடகியாக சின்மயி பாடிய 'ஒரு தெய்வம் தந்த…' பாடல் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. எம்எஸ்வி பாடிய 'விடை கொடு எங்கள் நாடே' பலரது தூக்கத்தைக் கெடுத்த பாடலாக அமைந்தது.
அந்த ஆண்டிற்காக சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஆடியோகிராபி, சிறந்த எடிட்டிங் என ஆறு தேசிய விருதுகளை அப்படம் பெற்றது.
தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் ஒரு முக்கியமான படமாக கருதப்படும் ஒரு படம் 'கன்னத்தில் முத்தமிட்டால்'.