ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடைபெற்றபோது அதில் நேரில் வந்து கலந்து கொண்டார் ஷாருக்கான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அப்போதே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் ஷாருக்கான்.
இந்தநிலையில் சென்னை எக்மோரில் உள்ள நயன்தாராவின் அபார்ட்மெண்டுக்கு நேரில் வருகை தந்து அவரது குழந்தைகளை பார்த்ததுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் ஷாருக்கான். நயன்தாராவின் அபார்ட்மெண்ட்டுக்கு ஷாருக்கான் வந்ததும், அவரை வரவேற்க நயன்தாரா வாசலுக்கே வந்ததுமான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.