ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடைபெற்றபோது அதில் நேரில் வந்து கலந்து கொண்டார் ஷாருக்கான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அப்போதே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் ஷாருக்கான்.
இந்தநிலையில் சென்னை எக்மோரில் உள்ள நயன்தாராவின் அபார்ட்மெண்டுக்கு நேரில் வருகை தந்து அவரது குழந்தைகளை பார்த்ததுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் ஷாருக்கான். நயன்தாராவின் அபார்ட்மெண்ட்டுக்கு ஷாருக்கான் வந்ததும், அவரை வரவேற்க நயன்தாரா வாசலுக்கே வந்ததுமான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.