முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவருக்கும், நடிகை நயன்தாரா இடையே ஒரு மறைமுக பனிப்போர் நீடித்து வருகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, ‛‛ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நடிகை ஒருவர் நடித்ததார்'' என நயன்தாரா பெயரை சொல்லாமல் விமர்சித்து இருந்தார் மாளவிகா.
இதற்கு நயன்தாரா ஒரு பேட்டியில், ‛‛ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் நடிப்பது கமர்சியல் படம் என்பதால்தான் அப்படி நடித்தேன்'' என பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் இப்போது ஒரு பேட்டியில் ‛லேடி சூப்பர் ஸ்டார்' பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள மாளவிகா மோகனன், “உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கையில்லை. பெண்களை சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்கள் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே” என்றார்.
இவரின் இந்த பேட்டி வைரலானது. நயன்தாராவை தான் மீண்டும் மாளவிகா மோகனன் சீண்டுகிறார் என ரசிகர்கள் அவரை வசைப்பாடினர். இந்தநிலையில் இதுபற்றி ஒரு பதிவு போட்டுள்ளார் மாளவிகா. அதில், ‛‛நான் எந்த ஒரு நடிகையையும் குறிப்பிட்டு அப்படி கூறவில்லை. பெண் நடிகைகள் பற்றி எனது கருத்தை தெரிவித்தேன். நயன்தாராவை மிகவும் நான் மதிக்கிறேன். மூத்த நடிகையாக அவரது திரையுலக பயணத்தை பார்த்து வியக்கிறேன். கொஞ்சம் மக்கள் அமைதியாக இருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.