மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவருக்கும், நடிகை நயன்தாரா இடையே ஒரு மறைமுக பனிப்போர் நீடித்து வருகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, ‛‛ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நடிகை ஒருவர் நடித்ததார்'' என நயன்தாரா பெயரை சொல்லாமல் விமர்சித்து இருந்தார் மாளவிகா.
இதற்கு நயன்தாரா ஒரு பேட்டியில், ‛‛ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் நடிப்பது கமர்சியல் படம் என்பதால்தான் அப்படி நடித்தேன்'' என பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் இப்போது ஒரு பேட்டியில் ‛லேடி சூப்பர் ஸ்டார்' பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள மாளவிகா மோகனன், “உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கையில்லை. பெண்களை சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்கள் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே” என்றார்.
இவரின் இந்த பேட்டி வைரலானது. நயன்தாராவை தான் மீண்டும் மாளவிகா மோகனன் சீண்டுகிறார் என ரசிகர்கள் அவரை வசைப்பாடினர். இந்தநிலையில் இதுபற்றி ஒரு பதிவு போட்டுள்ளார் மாளவிகா. அதில், ‛‛நான் எந்த ஒரு நடிகையையும் குறிப்பிட்டு அப்படி கூறவில்லை. பெண் நடிகைகள் பற்றி எனது கருத்தை தெரிவித்தேன். நயன்தாராவை மிகவும் நான் மதிக்கிறேன். மூத்த நடிகையாக அவரது திரையுலக பயணத்தை பார்த்து வியக்கிறேன். கொஞ்சம் மக்கள் அமைதியாக இருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.