முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
தமிழகத்தில் தற்போது வட இந்தியர்கள் அதிக அளவில் குடியேறி வருகிறார்கள். குறைந்த சம்பளத்தில் அவர்கள் வேலை செய்வதால் எல்லா இடத்திலும் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் இதற்கு எதிராக சில அமைப்புகள் இப்போது கொடி பிடிக்கின்றன. வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பதால் தமிழர்கள் பிற்காலத்தில் பெரும் பிரச்சினகைளை சந்திக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். கர்நாடகாவில், மும்பையில், கேரளாவில் பெரும் அளவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் இந்தியவர்கள் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இசை அமைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான விஜய் ஆண்டனி திடீரென இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கிறார். அதில் “வடக்கனும், கிழக்கனும், தெற்கனும், மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்து ஆதரவும், எதிர்புமான கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனிக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் ஆண்டனி தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்தபோது விபத்தில் சிக்கியவர் படுகாயத்துடன் உயிர் தப்பி தற்போதுதான் உடல்நலம் தேறி வருகிறார்.