இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
எண்பது தொண்ணூறுளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை பானுப்ரியா. ஒரு திறமையான நடன கலைஞரான இவர் நான் நடித்து வந்த சமயத்திலேயே தன்னுடன் நடித்த சக நடிகைகள் பலருக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். தனியாக நடன பள்ளி நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி எப்போதாவது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது தான் கடந்த இரண்டு வருடமாக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதனாலேயே நடனத்திற்காக தற்போது பிராக்டிஸ் செய்வதைக் கூட நிறுத்திவிட்டதாகவும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்குமுன்பு சில நேரங்கள் சில மனிதர்கள் என்கிற படத்தில் தான் நடித்தபோது டைரக்டர் ஆக்சன் என்று சொன்னபிறகும் வசனம் ஞாபகத்துக்கு வராமல் தடுமாறி நின்றதையும் குறிப்பிட்டுள்ளார் பானுப்ரியா.