நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எண்பது தொண்ணூறுளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை பானுப்ரியா. ஒரு திறமையான நடன கலைஞரான இவர் நான் நடித்து வந்த சமயத்திலேயே தன்னுடன் நடித்த சக நடிகைகள் பலருக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். தனியாக நடன பள்ளி நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி எப்போதாவது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது தான் கடந்த இரண்டு வருடமாக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதனாலேயே நடனத்திற்காக தற்போது பிராக்டிஸ் செய்வதைக் கூட நிறுத்திவிட்டதாகவும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்குமுன்பு சில நேரங்கள் சில மனிதர்கள் என்கிற படத்தில் தான் நடித்தபோது டைரக்டர் ஆக்சன் என்று சொன்னபிறகும் வசனம் ஞாபகத்துக்கு வராமல் தடுமாறி நின்றதையும் குறிப்பிட்டுள்ளார் பானுப்ரியா.