இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த 2021ல் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கும் துணை நடிகரான மகா காந்தி என்பவருக்கும் வார்த்தை தகராறு ஏற்பட்டு அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மீது தன்னை தாக்கியதாக வழக்கு தொடுத்ததுடன் தனக்கு அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார். ஆனால் விஜய்சேதுபதியோ, லாப நோக்கில் தொடுக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு எதிர்மனுதாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து விசாரணையில் சம்பவம் பெங்களூரில் நடைபெற்றதால் இங்கே விசாரிக்க முடியாது எனக்கூறி சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனாலும் அடுத்ததாக மகா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்து மீண்டும் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விஜய் சேதுபதி, மகா காந்தி இருவருமே நீதிமன்ற கவுன்சில் மூலமாக பரஸ்பரம் தங்களுக்குள் பேசி சமரசம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், வரும் மார்ச் 2ம் தேதி வழக்கு விசாரணையின்போது இரண்டு பேருமே வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கவுன்சிலிங் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.