நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள நடிகையான பாவனா, தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் உள்பட பல படங்களில் நடித்தார். 20க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார். கன்னட படங்களிலும் நடித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பிரச்னையால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட பாவனா, தற்போது மலையாள படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதோடு தமிழுக்கும் வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அவர் கணேஷ் வெங்கட்ராம் ஜோடியாக நடிக்கிறார், ஜெய்தேவ் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஹாரர் த்ரில்லர் ஜார்னரில் இந்த படம் தயாராகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்கிறது. கணேஷ் வெங்கட்ராம், பாவனா தொடர்பான காட்சிகள் படமாகி வருகிறது.