ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
களவாணி, வாகைசூடவா படங்களை இயக்கியவர் சற்குணம். இப்போது தனுஷ் நடிப்பில் நய்யாணடி என்ற படத்தை இயக்கப்போகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்காக அமலாபால், சமந்தா, ஹன்சிகா உள்பட பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கடைசி நேரம் வரை எந்த நடிகையும் செட்டாகவில்லை. அதன்காரணமாக, கதாநாயகிக்காக படப்பிடிப்பு தேதியை மாற்ற வேண்டாம் என்று தனுஷ் கொடுத்த தேதியில் படத்தை ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டார். அதனால் தீவிரமாக புதுமுக நடிகை வேட்டையை முடுக்கி விட்டவர் இப்போது ஸ்ரீகாந்த் நடித்த ஒருநாள் ஒரு கனவு படத்தில் நடித்த நஸ்ரியா நஜீம் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் இவரும், அவரது முந்தைய படங் களான களவாணியில் நடித்த ஓவியா, வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவைப்போன்றே கேரளாவைச்சேர்ந்தவர். இதுகுறித்து சற்குணத்தைக்கேட்டால், இவரும் கேரளாதான். ஆனால் கேரளத்து நடிகையே வேண்டும் என்று தேடிப்பிடித்து ஒப்பந்தம் செய்யவில்லை. அதுவாக அமைந்தது என்கிறார். மேலும், என்னைப்பொறுத்தவரை திறமையான நடிகை என்று தெரிந்துவிட்டால் அவர் எந்த மொழியைச்சேர்ந்தவராக இருந்தாலும் நடிக்க வைப்பேன். மற்றபடி கதாநாயகி விசயத்தில் நான் செண்டிமென்டெல்லாம் பார்ப்பதில்லை என்கிறார்.