படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
மராத்தி சினிமாவில் முன்னணியில் இருப்பவர் சோனாலி குல்கர்னி. ஹிர்கனி, விக்டோரியாக என சமீபத்தில் வெளியான படங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
அவர் தற்போது அங்கமாலி டைரிஸ் மற்றும் க்ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அடுத்த படமான 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகிறார். இப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார்.
இது குறித்து சோனாலி கூறியதாவது: இது நான் எதிர்பார்க்காத ஒன்று. தென்னிந்திய சினிமாவுக்கு செல்வேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். சமீபகாலமாக லிஜோவின் படங்களை கவனித்து வருகிறேன். மோகன்லாலை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகத் தெரியும். இவர்களோடு இணைவது எனக்கு பெரிய கவுரவம்.
சினிமாவின் மாநில எல்லைகள் மறைந்து நாம் அனைவரும் இந்தியத் திரைப்படத் துறையாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இந்த படம் பீரியட் டிராமா. இதற்காக தற்போது ஒர்க்கவுட் செய்து வருகிறேன். இதுகுறித்து மோகன்லாலிடம் பேசினேன். அவர் மலையாளம் கற்றுக் கொள்ளச் சொன்னார். அதையும் செய்ய இருக்கிறேன். என்றார்.