ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

குக்வித் கோமாளி சீசன் 4ல் இம்முறை புதிய கோமாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவராக சோஷியல் மீடியாக்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட ஓட்டேரி சிவாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓட்டேரி சிவா முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பிறகு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைகர் கார்டன் தங்கதுரை என்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கு காரணமாக ஓட்டேரி சிவா குடித்துவிட்டு வருவதும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது செயல்கள் நாகரீகமாக இல்லை என்றும் செய்திகள் பரவின. இதனையடுத்து இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள ஓட்டேரி சிவா, 'நான் குடிக்கமாட்டேன். அவர்கள் சொல்வது பொய். சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்புடுவேன். நான் பிரபலமாகி அதிகம் சம்பாரிக்கிறேன் என்ற பொறாமையில் சிலர் அப்படி கூறுகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து என்னை நீக்கவில்லை. விரைவில் கூப்புடுகிறோம் என்று கூறியுள்ளனர்' என்றார். மேலும், தனது ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும்படியும் வேண்டுகோள் வைத்துள்ளார்.