நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'விடுதலை' படத்தின் முதல் சிங்கிளான 'உன்னோட நடந்தா' பாடல் நாளை பிப்ரவரி 8ம் தேதி வெளியாக உள்ளது. இப்பாடலை எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான சுகா எழுதியுள்ளார். சுகா, வெற்றிமாறன் ஆகியோர் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றியவர்கள்.
'உன்னோட நடந்தா' பாடல் எழுதிய அனுபவத்தைப் பற்றி சுகா அவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது,
உன்னோட நடந்தா . . .
வெற்றி மாறன் அழைத்தான்.
'அண்ணே! உங்களை ஒருத்தர் பாக்கணுமாம். உடனே கிளம்பி வாங்க.'
'யாருடா?' அசட்டையாகக் கேட்டேன்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு பெரியவர் பேரைச் சொன்னான். அருகில் அவரது சிரிப்புச் சத்தம் கேட்டது.
'அடேய்' என்றபடி போனை வைத்துவிட்டு ஓடினேன்.
'இப்படி கூப்பிட்டாதான் வருவே இல்ல!?' என்றபடி வரவேற்றார்.
'விடுதலை' படத்திற்காக ஒரு பாடல் எழுத அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது.
'எனக்கு பாட்டு எழுதத் தெரியாதே ஸார்' என்றேன்.
'நீ எழுதுய்யா. அதுதான் பாட்டு'.
வெற்றிமாறனைத் தனியாக அழைத்து சூழல் என்னவென்று கேட்டேன். அப்போதுதான் அவன் கூடுதலாக இந்தத் தகவலைச் சொன்னான்.
'சுகாவைக் கூப்பிடுவோம். மாட்டேன்னுதான் சொல்லுவான். ஆனா எழுத வச்சுடலாம். இளையராஜா வெற்றிமாறன் சுகான்னு நம்ம பேமிலி நேம்ஸ் இருந்தா நல்லா இருக்கும்' என்றாராம், பெரியவர்.
'பேப்பரும், பேனாவும் குடுடா' என்று வெற்றியிடம் கேட்டு வாங்கிக் கொண்டு பெரியவர் முன் அமர்ந்து சில வரிகள் எழுதிக் கொடுத்தேன்.
'ஓ ! Phrases ஆ எழுதிட்டியா?'
'ஆமா ஸார். எனக்கு இப்படித்தான் எழுத வருது. நீங்கதான் இதைப் பாட்டா மாத்திக்கணும்'.
மாற்றினார். பாடினார். அதற்குப் பிறகு தனுஷைப் பாட வைத்தார். வணங்கினேன். விடைபெற்றுக் கொண்டேன். நாளை பாடல் வெளியீடு.
எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா இசையில் தனுஷ் பாடும் இந்தப் பாடல் வெளியீட்டிற்கு முன்பாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.