நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோ ஆனவர் சரத்குமார். இவரும் நடிகை ராதிகாவும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தொடர்ந்து இருவருமே திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன், வாரிசு போன்ற படங்கள் திரைக்கு வந்தன. அதேபோல் ராதிகா நடிப்பில் வெந்து தணிந்தது காடு, லவ் டுடே என பல படங்கள் திரைக்கு வந்தன. இந்தநிலையில் சமீபத்தில் சரத்குமாரும் ராதிகாவும் தங்களது 22 வது திருமணநாளை கொண்டாடினார்கள். அதையடுத்து தனது இன்ஸ்டாவில் தங்களது போட்டோக்களை தொகுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சரத்குமார்.
அதில், ‛‛22 ஆண்டுகள் அன்பு, புரிதல், ஒற்றுமை என மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த எங்கள் வாழ்வு நீண்ட பேரின்ப பயணம். வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும் பார்த்து இருந்தாலும் உண்மையான அர்த்தத்தை அறிய வைத்ததற்கு நன்றி. இன்று போல் என்றும் ஒன்றாகவும், அழகான குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.