நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வசூல் என்பதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு படம் ரூ.300 கோடி வசூலைப் பெறவது சாதாரண விஷயமல்ல. கடந்தாண்டு இரண்டு படங்கள் 300 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்திருந்தது. கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள்தான் அவை. 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும், 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலையும் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் 600 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அதற்கடுத்து விஜய் நடித்த 'பிகில்' படம் 300 கோடி வசூலைக் கடந்திருந்தது. ரஜினிகாந்தின் 'கபாலி, எந்திரன்' ஆகியவை 300 கோடி வசூலைப் பெற்றதாகவும் தகவல் உண்டு. தற்போது விஜய் நடித்த 'வாரிசு' படம் 300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இரண்டு படங்கள் 300 கோடி வசூலைப் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'வாரிசு' படத்துடன் வெளியான 'துணிவு' படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில் 'வாரிசு' படத்தின் 300 கோடி வசூலை நேற்று அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கொண்டாட ஆரம்பித்தனர் விஜய் ரசிகர்கள்.