துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வசூல் என்பதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு படம் ரூ.300 கோடி வசூலைப் பெறவது சாதாரண விஷயமல்ல. கடந்தாண்டு இரண்டு படங்கள் 300 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்திருந்தது. கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள்தான் அவை. 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும், 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலையும் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் 600 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அதற்கடுத்து விஜய் நடித்த 'பிகில்' படம் 300 கோடி வசூலைக் கடந்திருந்தது. ரஜினிகாந்தின் 'கபாலி, எந்திரன்' ஆகியவை 300 கோடி வசூலைப் பெற்றதாகவும் தகவல் உண்டு. தற்போது விஜய் நடித்த 'வாரிசு' படம் 300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இரண்டு படங்கள் 300 கோடி வசூலைப் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'வாரிசு' படத்துடன் வெளியான 'துணிவு' படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில் 'வாரிசு' படத்தின் 300 கோடி வசூலை நேற்று அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கொண்டாட ஆரம்பித்தனர் விஜய் ரசிகர்கள்.