நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இயக்குனர் மாரி செல்வராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான பரியேறும் பெருமாள் படம் சிறந்த படமாக பாராட்டப்பட்டதுடன் அதில் நடித்த கதிர், ஆனந்தி, யோகிபாபு மட்டுமல்லாமல், மற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் பெயரை பெற்று தந்தது. அந்த வகையில் அந்த படத்தில் கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நெல்லை தங்கராஜ். கூத்து கலைஞரான இவர் இன்று வயது மூப்பு காரணமாக நெல்லையில் காலமானார்.
இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “ஆங்காரமாய் ஆடியது போதும்.. இளைப்பாருங்கள் அப்பா.. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடு இருக்கும்.. பரியேறும் பெருமாள்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்