இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் சரித்திர காலகட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை முடித்ததும் மார்ச் மாதத்திற்கு பிறகு வெற்றிமாறன் இருக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்ற பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப் போகிறாராம் வெற்றிமாறன். அதனால் அவர் இடைவெளி கொடுக்கும் அந்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே தன்னை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா. அந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இரண்டே மாதத்தில் கேப் விடாமல் நடித்து கொடுத்துவிட்டு அதையடுத்து மீண்டும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.