நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்க சாமி, உதவும் கரங்கள் படங்களை இயக்கியவர் சண்முகப்ரியன். இயக்குனராக மட்டுமல்லாமல் கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தவர். பிரம்மா, வெற்றி விழா, சின்னத்தம்பி பெரியதம்பி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் இருந்திருக்கிறார்.
71 வயதான சண்முகப்பரியன் திரைப்படத்துறையில் இருந்து விலகி போரூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி காலமானார். அருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.