மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில், உன்னி முகுந்தன், பேபி தேவநந்தா மற்றும் பலர் நடித்து டிசம்பர் 30ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் 'மாளிகப்புரம்'. சபரிமலைக்குச் செல்ல ஆசைப்படும் ஒரு சிறுமி, தனது தோழன் ஒருவனுடன் சபரிமலை செல்வதுதான் இப்படத்தின் கதை.
கேரளாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு மோகன்லால் நடித்த 'புலிமுருகன், லூசிபர்' ஆகிய படங்கள்தான் 100 கோடி வசூலைக் கடந்திருந்தது.
'மாளிகப்புரம்' 100 கோடி வசூலைக் கடந்தது குறித்து அப்படத்தின் கதாநாயகன் உன்னி முகுந்தன், “அனைவருக்கும் நன்றி, மகிழ்ச்சி, பெருமை…எங்களது படத்திற்கு ஆதரவும் அன்பும் தந்த அனைத்து குடும்ப ரசிகர்கள், குழந்தைகள் அனைவருக்கும் மிக்க நன்றி. 'மாளிகப்புரம்' குழுவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்தகள்,” எனத் தெரிவித்துள்ளார்.