இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 67வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் இந்த படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியாகியுள்ளது என்றாலும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத், பிரித்விராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் நிலையில், காந்தாரா படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது. ஆனால் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில், விஜய் 67வது படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தன்னைக் அப்படத்தில் நடிப்பதற்கு யாரும் அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் விஜய் 67வது படத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பதாக வெளியான செய்திகள் வதந்தி என்று தெரியவந்துள்ளது.